100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி- இலக்கை கடக்கிறது இந்தியா- கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு!
டெல்லி: நாடு முழுவதும் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் தொடருகிறது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,005 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியா நிலவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. உலக நாடுகளின் ஒருநாள் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா தற்போது 7-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 18,359 ஆக உள்ளது. நாட்டில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 1,78,098 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று 17,560 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 99,12,82,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இன்று காலை வரை இது 99.85 கோடியாக உயர்ந்துள்ளது.

100 கோடி இலக்கை தாண்டுகிறது
இன்று இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்ட உள்ளது. நமது நாட்டில் ஒரு வினாடிக்கு மொத்தம் 700 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாட்டில் இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர்.

100 கோடி இலக்கு- கொண்டாட்டஙக்ள்
இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் போது டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி











Click it and Unblock the Notifications