இலங்கைக்கு உதவ களம் இறங்குகிறது இந்தியா.. தேசிய பாதுகாப்பு குழு விரைகிறது
இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்பி உதவ இந்தியா முடிவெடுத்துள்ளது.
டெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு தேசிய பாதுகாப்புக் குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
இலங்கை மிகப் பெரும் அபாயகரமான சூழலில் சிக்கியுள்ளது. அங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதால் தேடுதல் வேட்டையும் தீவிரமாகியுள்ளது.

இந்தியா உதவி
இந்த நிலையில் இலங்கைக்கு உதவ பல்வேறு நாடுகளும் களம் இறங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவும் தனது உதவியைக் கொடுக்கவுள்ளது. அதன்படி தேசிய பாதுகாப்புக் குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடுப்பு பிரிவினர்
இந்தக் குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் இலங்கை படையினருக்கு உதவி செய்வார்கள்.

தயார் நிலை
இந்த படையினர் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும். உத்தரவு கிடைத்ததும் அவர்கள் இலங்கை செல்வார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அசாதாரண சூழல்
கடந்த 80களில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படை சென்றது. பெரும் சேதத்தையும் அங்கு சந்தித்தது. அதன் பிறகு இந்தியப் படையினர் யாரும் இலங்கைக்கு போனதில்லை. இந்த நிலையில் தற்போது இலங்கையில் அசாதாரண சூழல் எழுந்துள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழு இலங்கை செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications