மோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், எதிரி நாடுகளின் எத்தகைய தாக்குதல் முயற்சிகளுக்கும், தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

கார்கில் போரின்போது தடைகளை தகர்த்து மாபெரும் வெற்றியை இந்திய ராணுவ வீரர்கள் ஈட்டியதாக பாராட்டு தெரிவித்தார். எதிர்காலங்களில் போர் வந்தால், தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்காக இருக்கும். அதே சமயம், இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரையில், வீரர்களே முதன்மையான சொத்துகள் என்றும் பிபின் ராவத் கூறினார்.
மேலும், லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் வெளியான செய்திகள் குறித்து பதிலளித்த அவர், சீன படையினர் தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
டெம்சோ செக்டாரில் உள்ள திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது என்றார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications