தரைவழி தாக்குதலுக்கு ரெடி.. பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த ராணுவ தளபதி.. அதிரடி
டெல்லி: ‛‛ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. இந்த நடவடிக்கையின்பேது தரைவழி தாக்குதல்களை தொடங்கி நம் ராணுவம் தயாராக இருந்தது. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் சீண்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும்'' என்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்தரி திவேதி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நம் நாட்டின் ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தெளிவான அரசியல் வழிக்காட்டுதல் மற்றும் முழு சுதந்திரத்துடன் உரிய பதிலடி கொடுத்தல் உள்ளிட்டவற்றுக்கான முப்படைகளின் ஒருங்கிணைப்பு பணிக்கு உதாரணம் தான் ‛ஆபரேஷன் சிந்தூர். இந்த பதிலடி நடவடிக்கை தொடரும். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தவறு செய்தால் தரைவழி தாக்குதல் நடத்த நம் ராணுவம் தயாராக இருந்தது. நம் ராணுவம் 9 பயங்கரவாத இலக்குகளில் 7யை தரைமட்டமாக்கியது. அதன்பிறகு பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்து முக்கிய பங்காற்றியது.
கடந்த ஆண்டில் உலகளவில் ஆயுத மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த உலகளாவிய மாற்றங்கள் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால் தயார் நிலையில் இருக்கும் நாடுகள் வெற்றி பெறுகின்றன. இந்த சூழலில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நம் நாட்டின் சீரான, உறுதியான பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்துள்ளது. இது நம் நாட்டின் தயார் நிலை, துல்லிய தாக்குதல் மற்றும் தெளிவான முடிவு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியது.
மத்திய ஆயுத காவல் படைகள், உளவு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில நிர்வாகம், உள்துறை அமைச்சகம், ரயில்வே உள்பட பிற அமைச்சகங்கள் உள்பட தேசிய அளவில் உள்ள அனைத்து தரப்பினரின் முனனைப்பான பங்களிப்பை நான் பாராட்ட விரும்புகிறேன்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வாலாட்டினால் வரும்காலத்தில் தரைவழி தாக்குதல் கூட நடத்துவோம் என்பதை உபேந்திர திவேதி வார்னிங்காக வெளிப்படுத்தி உள்ளார்.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications