இஸ்ரேல்- அரபு எமிரேட்ஸ் உடன்பாடு- இந்தியா வரவேற்பு! பாலஸ்தீன நிலைப்பாடு தொடரும் என அறிவிப்பு
டெல்லி: இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பாலஸ்தீன பிரச்சனையால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையேயான ராஜாங்க ரீதியான உறவுகள் முட்டுக்கட்டையாக இருந்து வந்தன. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இருநாடுகளும் ராஜாங்க ரீதியான உறவுகளை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இது தொடர்பான ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பாலஸ்தீன நிலப்பகுதியை ஆக்கிரமிது இஸ்ரேல் தமது நாட்டுடன் இணைக்காது என கூறப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீனமோ இதனை நிராகரித்ததுடன், எமிரேட்ஸ் செய்திருப்பது துரோகம் என சாடியுள்ளது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின்னிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனை பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்திலும் ஜெய்சங்கர் பதிவிட்டார்.
இதனிடையே வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராத் ஶ்ரீவத்சவா டெல்லியில் செய்தியாளர்களிடம் இந்த ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, மேற்காசியாவில் அமைதி நீடித்து நிலவ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆகையால் எமிரேட்ஸ்- இஸ்ரேல் ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் பாரம்பரியமாக பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் ஆதரவும் தொடரும் என்றும் ஶ்ரீவத்சவா கூறினார்.
-
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்!











Click it and Unblock the Notifications