எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 3-வது நாடாக உயர்ந்திருக்கும்: மோடி
டெல்லி: 2028 ஆம் ஆண்டிலும் எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. இந்தியாவின் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் எந்த திட்டங்களும் இல்லை. நாட்டை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற இலக்கும் திட்டமும் காங்கிரஸ் கட்சியிடம் கிடையாது. எனது 3-வது ஆட்சி காலத்தில் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 3-வது நாடாக உயர்ந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் தொலை தூர பார்வை கொண்ட தலைவர்கள் கிடையாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் வறுமை உச்சத்தில் இருந்தது. 2028 ஆம் ஆண்டிலும் எங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அப்போது இந்தியா உலகின் 3-வது பொருளாதார நாடாக உயர்ந்து இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பின் மீது நம்பிக்கை கிடையாது. இவ்வாறு மோடி பேசினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டிலும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் போது, 2023- ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், தற்போதும் பிரதமர் மோடி, அதேபோன்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications