இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை!
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

பேசவில்லை
அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய கருத்துக்கள் சொன்னார்கள். ஆனால் இந்திய அரசு சார்பாக எந்த விதமான அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

உன்னிப்பாக கவனிக்கிறோம்
இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து இன்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடு. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். இலங்கையில் ஜனநாயகம் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய பந்தம் உள்ளது.

உதவி தொடரும்
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் தொடரும். இலங்கையில் நடந்து வரும் ஆட்சி மாற்றம் பற்றி இந்தியா முக்கிய முடிவுகளை தேவைப்படும் சமயங்களில் எடுக்கும். இலங்கைக்கு தேவையான பொழுது இந்தியா தேவையான அரசியல் உதவிகளை வழங்க தயாராக இருக்கிறது.

பெரிய பரபரப்பு
இந்த நிலையில் இந்தியாவின் இந்த அறிக்கை இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கைக்கு அரசியல் ரீதியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருப்பது தமிழர்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications