பாகிஸ்தானை சமாளிக்க செம பிளான்.. தாக்குதல் நடந்தபோது எல்லையில் பறந்த எம்ப்ரேயர் கண்காணிப்பு விமானம்
டெல்லி: இந்திய விமானப்படை விமானங்கள், இன்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. பாலகோட் உட்பட மொத்தம் 3 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் 12 போர் விமானங்களும் பத்திரமாக நாடு திரும்பின.
பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய தீவிரவாத முகாம் உள்ளது. இதனால் அங்கு, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், தற்கொலை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பலரும் அழிக்கப்பட்டனர்.

முன்கூட்டியே எச்சரிக்கும் விமானம்
இந்த தாக்குதலை இந்திய விமானப்படை சிறப்பாக திட்டமிட்டு நடத்தியுள்ளது. மொத்தம் 12 'மிராஜ் 2000' போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த அதே நேரத்தில், இந்திய விமானப்படையின், எம்ப்ரேயர் இஎம்பி-145 (Embraer EMB-145) வகை (முன்கூட்டியே எச்சரிக்கும்) விமானம் இந்திய எல்லையில் ரோந்து சுற்றியுள்ளது.
|
வழிகாட்டுதல்கள்
எம்ப்ரேயர் வகையை சேர்ந்த இந்த விமானம், எதிரி நாட்டு விமானங்களின் வருகையை கண்காணிக்கும் திறமை மிக்கது. மேலும், நமது நாட்டு ஜெட் விமானங்களுக்கும், வழிகாட்டுதலை கொடுக்கும் உபகரணங்களை கொண்டது. இந்த விமானத்தை எல்லையில் பறக்கவிட்டபடிதான், 12 போர் விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பியுள்ளது இந்திய விமானப்படை.
|
எச்சரிக்கை
இதன் மூலம், நமது நாட்டுக்குள் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்துவிடுவதை தடுப்பதோடு, நமது போர் விமானங்களுக்கு உரிய எச்சரிக்கையை பிறப்பிப்பது போன்றவற்றுக்கு, பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, IL 78 வகையை சேர்ந்த விமானங்கள், இந்திய போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பலாம்
நடு வானில் பறந்தபடி, பிற விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் திறமை கொண்டவை ஐஎல் 78 வகை விமானங்களாகும். எரிபொருள் தட்டுப்பாடு ஒருவேளை ஏற்பட்டால், நமது போர் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த விமானமும் எல்லையில் வட்டமிட்டபடி இருந்துள்ளது.

வெளியே வந்த தகவல்
இந்திய வான்வெளியில் இன்று காலை முதலே, அசாதாரணமான வகையில் பல விமானங்கள் பறந்துள்ளதை சர்வதேச, விமான டிராக்கர் கருவிகள் கண்டறிந்துள்ளன. அதன்படிதான் இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தற்போது தெரியவந்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications