அடுத்தடுத்து அதிரடி.. இந்திய விமானப்படை திறன் 20% அதிகரிப்பு.. என்ன காரணம்?
டெல்லி: கடந்த சில மாதங்களில், இந்திய விமானப்படை தனது திறனை 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப்படையின், போர் திறனை அதிகரிக்க விமானப்படை கடந்த சில மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் விமான வீரர்களுக்கு கூடுதலாக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முடிவு விமானப்படையின் திறனை 20% அதிகரித்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தன.
இது படைகளின் செயல்பாட்டு திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமானப்படை வீரர்கள் மீதான அழுத்தத்தையும் குறைக்கும்.

2019ல் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், விமானப்படை தனது போர் திறனை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறது. ஏர்-டு-ஏர் ஏவுகணைகள் மற்றும் வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆயுத அமைப்புகள், ஸ்பைஸ் -2000 குண்டுகள் மற்றும் ஸ்ட்ரம் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
முதல் போர் விமான படைப்பிரிவு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களும் அடங்கும். இந்தியப் பெருங்கடலைக் கண்காணிப்பதில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று விமானப்படை கூறுகிறது. இது தவிர, கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் உதவி பெறும். இந்த சுகோய் விமானங்கள் அனைத்திலும் பிரம்மோஸ் ஏவுவகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானம் தேஜஸ் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் விமானப் படையில், 2018 ஜூலை மாதம் சேர்க்கப்பட்டது. முன்னதாக இது பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications