பெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை!
டெல்லி: ஆட்டோமொபைல் தொழில் மிகப்பெரிய சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பணியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவதோடு, புதிதாக பணிக்கு ஆள் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் அசோக் லேலன்ட் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பிரஷர்களை பணிக்கு எடுக்கக்கூடிய பணியை நிறுத்தி வைத்துள்ளன.

டிராக்டர்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாட்டின் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பணிக்கு சேர்க்கக் கூடிய பணியாளர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைந்துள்ளது.
சுமார் 400 பேரை இவ்வாறு பணிக்கு சேர்க்கக் கூடிய அந்த நிறுவனம், இப்போது 200 பேரை பணிக்கு சேர்த்துள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ்வர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
புதியவர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொண்டு உற்பத்தி திறனை அதிகரிப்பது தான் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் தொழில் சரிய தொடங்கியது முதலே பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் மிகவும் யோசித்து தான் செயல்பட்டு வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே உள்ள பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிறார் அவர்.
19 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை மிகப் பெரும் சரிவை சந்தித்தது. பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. பொதுவாக ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் தொழில் பயிற்சிக் கூடங்களில் கேம்பஸ் நேர்காணல்கள் நடத்தி ஆள் சேர்க்கை செய்வது வழக்கம், இப்போது பல தொழில்நுட்பக் கல்லூரிகளும் நேர்காணல் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன என்கிறார்கள் இந்த துறை வல்லுநர்கள்.
நாட்டின் ஆட்டோமொபைல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலன்ட்டையும் பாதித்துள்ளது.
இந்த பிரச்சனை இந்த வருடத்தோடு முடிவடைய போவது கிடையாது, இன்னும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது இதேபோன்ற நெருக்கடிநிலை நீடிக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய ஆட்டோமொபைல் துறையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 37 மில்லியன் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications