Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சீரியஸ்” மேட்டர்.. எட்ஜ் பிரவுசர் பயனரா நீங்க! உடனே இதை செய்யுங்க - இந்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துவதால் மக்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம்தான் இன்று வரை பெரும்பாலான கணினிகள், லேப்டாப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையதளத்தை பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளத்துடன் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் என்ற இணையதள பிரவுசரை பயன்படுத்தி வந்தது. கூகுள் குரோம், மொஜில்லா ஃபயர்பாக்ஸ் வருகைக்கு பிறகு அதன் பயன்பாடு குறைந்தது.

மைக்ரோசாப்ட் எட்ஜ்

மைக்ரோசாப்ட் எட்ஜ்

இதனால் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் செயலியின் சேவையை நிறுத்திய மைக்ரோசாப்ட் பல்வேறு புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் எட்ஜ் என்ற பெயரில் புதிய பிரவுசரை வெளியிட்டது. புதிய விண்டோஸ் அப்டேட்டுகளில் இந்த எட்ஜ் பிரவுசரும் வருகிறது. இருப்பினும் பெரும்பாலான பயனர்கள் கூகுள் குரோமை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

 மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு எச்சரிக்கை

எனவே எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைவுதான். ஆனால், புதிய அம்சங்களின் காரணமாக நாட்கள் செல்ல செல்ல எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

 பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

இதற்கு காரணம், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை இந்திய அரசு கண்டுபிடித்து உள்ளது. குறிப்பாக எட்ஜ் பிரவுசரின் 110.0.1587.41. என்ற வெர்சனில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்திய கணினி அவசர உதவிக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

ஹேக் செய்யப்படலாம்

ஹேக் செய்யப்படலாம்

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுரை பயனர்களின் கணினியை முடக்கி ஹேக்கர்களால் பயன்படுத்த முடியும் என்றும், அவர்களால் நமது கணிணியில் உள்ள சேவைகளை மறுப்பது, கோடிங்குகளை செய்வது, சிறப்புரிமை தருவது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறுவது, தகவல்களை திருடுவது, தகவல்களை வெளியிடுவது போன்ற பணிகளை செய்ய முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

 தவிர்ப்பது எப்படி?

தவிர்ப்பது எப்படி?


ஹேக்கர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் செக்யூரிட்டி பேட்ச் எனப்படும் பாதுகாப்பு வெர்சன் அப்டேட்டுகளை பயனர்கள் செய்யுமாறும் இந்திய கணினி அவசர உதவிக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கை எட்ஜ் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+