“சீரியஸ்” மேட்டர்.. எட்ஜ் பிரவுசர் பயனரா நீங்க! உடனே இதை செய்யுங்க - இந்திய அரசு மீண்டும் எச்சரிக்கை
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துவதால் மக்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம்தான் இன்று வரை பெரும்பாலான கணினிகள், லேப்டாப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையதளத்தை பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளத்துடன் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் என்ற இணையதள பிரவுசரை பயன்படுத்தி வந்தது. கூகுள் குரோம், மொஜில்லா ஃபயர்பாக்ஸ் வருகைக்கு பிறகு அதன் பயன்பாடு குறைந்தது.

மைக்ரோசாப்ட் எட்ஜ்
இதனால் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் செயலியின் சேவையை நிறுத்திய மைக்ரோசாப்ட் பல்வேறு புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் எட்ஜ் என்ற பெயரில் புதிய பிரவுசரை வெளியிட்டது. புதிய விண்டோஸ் அப்டேட்டுகளில் இந்த எட்ஜ் பிரவுசரும் வருகிறது. இருப்பினும் பெரும்பாலான பயனர்கள் கூகுள் குரோமை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு எச்சரிக்கை
எனவே எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைவுதான். ஆனால், புதிய அம்சங்களின் காரணமாக நாட்கள் செல்ல செல்ல எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

பாதுகாப்பு குறைபாடு
இதற்கு காரணம், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை இந்திய அரசு கண்டுபிடித்து உள்ளது. குறிப்பாக எட்ஜ் பிரவுசரின் 110.0.1587.41. என்ற வெர்சனில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்திய கணினி அவசர உதவிக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

ஹேக் செய்யப்படலாம்
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுரை பயனர்களின் கணினியை முடக்கி ஹேக்கர்களால் பயன்படுத்த முடியும் என்றும், அவர்களால் நமது கணிணியில் உள்ள சேவைகளை மறுப்பது, கோடிங்குகளை செய்வது, சிறப்புரிமை தருவது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறுவது, தகவல்களை திருடுவது, தகவல்களை வெளியிடுவது போன்ற பணிகளை செய்ய முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தவிர்ப்பது எப்படி?
ஹேக்கர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் செக்யூரிட்டி பேட்ச் எனப்படும் பாதுகாப்பு வெர்சன் அப்டேட்டுகளை பயனர்கள் செய்யுமாறும் இந்திய கணினி அவசர உதவிக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கை எட்ஜ் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications