ரயிலில் இனி ஜன்னல் சீட்டிற்கு சண்டை இருக்காது! விரும்பிய சீட்டை நாமே தேர்வு செய்யலாம்! மேஜர் மாற்றம்
டெல்லி: இந்தியாவில் ரயில் பயணங்களை மேம்படுத்த ரயில்வே வாரியம் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது விமானங்களைப் போலவே ரயில்களிலும் பிடித்த சீட் தேர்வு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. இதுபோல பல்வேறு புதிய அம்சங்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாடு முழுக்க தினசரி பல லட்சம் பயணிகள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து முறையாக ரயில்வே இருக்கிறது. ரயிலில் சில குறைகள் இருப்பதாகப் பயணிகள் சுட்டிக்காட்டுவதை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்திய ரயில்வே தன்னுடைய பயணிகள் முன்பதிவு முறையை (Passenger Reservation System - PRS) மேம்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..

சீட் தேர்வு செய்யலாம்
குறிப்பாக சீட் தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வர இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது விமானங்கள், ரிசர்வ் பேருந்துகளில் நாம் எப்படி சீட்களை தேர்வு செய்கிறோமோ அதுபோல ரயில்களிலும் சீட்களை தேர்வு செய்யும் முறையை இந்தியன் ரயில்வே கொண்டுவர இருக்கிறது. இந்த புதிய வசதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய முன்பதிவு முறையில் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன், கட்டண விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தைச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் போன்றோருக்கான வசதிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன" என்றார்.
8 மணி நேரம் முன்பு
ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் ரயில் டிக்கெட் புக்கிங் சீர்திருத்தங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். டிக்கெட் முன்பதிவு முறையை மேலும் ஸ்மார்ட் ஆகவும் வெளிப்படையாகவும் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் மாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முன்பதிவு சார்ட்டுகள் தயாரிப்பதிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தற்போது, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு சார்ட் தயார் செய்யப்படுகிறது.
இருப்பினும், 4 மணி நேரத்திற்கு முன்பு என இருப்பதால் கடைசி நிமிடத்தில் டிக்கெட் உறுதியாகாமல் பயணிகள் அவதியை எதிர்கொள்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன!
இது குறித்து அதிகாரி மேலும் கூறுகையில், "ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (Centre for Railway Information Systems - CRIS) மேம்படுத்தப்பட்ட நவீனப் பயணிகள் முன்பதிவு முறையை (Modern Passenger Reservation System - PRS) உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
புதிய PRS அமைப்பானது, நிமிடத்திற்கு 1.5 லட்சம் முன்பதிவுகளைக் கையாளும் திறன் கொண்டது. இது தற்போதுள்ள திறனை விட ஐந்து மடங்கு அதிகம். மேலும், டிக்கெட் குறித்து அறிந்து கொள்ளும் திறன் இப்போது நிமிடத்திற்கு 4 லட்சமாக இருக்கும் நிலையில், அதுவும் 40 லட்சமாக அதிகரிக்கும். இந்த அமைப்பு பல மொழிகளில் இருக்கும். மேலும் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் புக்கிங் ஆதார்
இது ஒரு பக்கம் இருக்க தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் ஒரே நேரத்தில் அதிக டிக்கெட்களை புக் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தட்கல் புக்கிங்கில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜூலை 1 முதல் ஆதார் மூலம் வெரிஃபை செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications