அலறப்போகும் எதிரிகள்.. 5ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் இந்தியா! ராஜ்நாத் சிங் தந்த ஒப்புதல்
டெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை போல் 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஏஎம்சிஏ எனும் 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஒப்புதல் வழங்கி உள்ளார்.
நம் நாட்டிடம் அதிக சக்திவாய்ந்த போர் விமானம் என்றால் அது ரஃபேல் போர் விமானம் தான். இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நம் நாடு வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரஃபேல் போர் விமானம் என்பது 4.5 ம் தலைமுறையை சேர்ந்தது.

இந்த ரஃபேல் போர் விமானம் என்பது போரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தற்போது நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக விமானப்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக்கும் உள்ளது.
இதனால் 5ம் தலைமுறை விமானம் என்பது முக்கியம். தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன. துருக்கி 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் நம் நாடும் 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்தது.
அதன்படி 5ம் தலைமுறை விமானத்தை ஏஎம்சிஏ திட்டம் (ACMA Programme) மூலம் தயாரிக்க நம் நாடு முடிவு செய்தது. இந்த ACMA என்பதன் விரிவாக்கம் என்பது Advanced Medium Combat Aircraft என்பதாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் மேம்படுத்தப்பட்ட மீடியம் ரக போர் விமானம் என்பதாகும். இந்நிலையில் தான் 5ம் தலைமுறை விமானத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல் விமானத்துக்கான மாடலுக்கு இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி இந்த விமானத்தை நம் பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ நிறுவனம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க உள்ளது.
இந்த திட்டத்தின்படி நம் நாட்டுக்கு 5ம் தலைமுறை விமானம் என்பது 2035ம் ஆண்டில் கிடைக்கும். இந்த 5ம் தலைமுறை போர் விமானம் என்பது ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானமாகும். சிங்கிள் சீட், 2 இன்ஜின்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ஸ்டெல்த் ரகம் என்பதால் இந்த விமானம் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. இதனால் இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications