இந்தியாவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே மாவட்டம்.. அப்போ சிஎம் யார்? குழப்பமா இருக்கே
டெல்லி: இந்தியா பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு உள்ள கலாச்சாரம், ஆடை அமைப்பு ஆகியவற்றை வேறு எங்கும் நம்மால் பார்க்கவே முடியாது. இந்தியாவில் பல்வேறு மாவட்டங்கள் உள்ள நிலையில், எப்போதும் ஒரு மாவட்டம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரே ஒரு மாவட்டம் மட்டும் இரு மாநிலங்களில் உள்ளன. அது என்ன மாவட்டம். அதன் சிறப்பம்சம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாடு பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலமும் நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எளிதாகத் தேவையான திட்டங்களை அரசால் செயல்படுத்த முடிகிறது.

இரு மாநிலங்களில் உள்ள மாவட்டம்
நமது நாட்டில் எப்போதும் ஒரு மாவட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், நாட்டில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் இரு வெவ்வேறு மாநிலங்களில் உள்ளது.. இப்படி ஒரு மாவட்டம் இரு மாநிலங்களிலும் அமைந்துவிட சில வரலாற்று முடிவுகளும், மாநில எல்லைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகும். இதனால் இந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் வாழும் மக்கள் இரு வேறு மாநில விதிகளைப் பின்பற்ற நேரிடுகிறது. இது நமது நாட்டில் ஒரு தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியா பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கொண்டதாக உள்ள நிலையில், நாடு முழுக்க மொத்தம் 788 மாவட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தை ஒழுங்கமைக்கவும், அரசுத் திட்டங்களைச் சீராக வழங்குவதை உறுதி செய்யவும், நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவுமே இதுபோல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
சித்ரகூட்:
இதனால் எந்தவொரு மாவட்டமாக இருந்தாலும் அது எப்போதும் ஒரு மாநிலத்தின் கீழ் தான் வரும். ஆனால், சித்ரகூட் என்ற மாவட்டம் மட்டும் இதில் தனித்துவமாக இருக்கிறது. இது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் என்று இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் என்ற சாதனையை சித்ரகூட் படைத்துள்ளது.

எந்த மாநிலத்தில் வரும்:
வடக்கு விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள சித்ரகூட் இரு மாநிலங்களின் எல்லைகளில் நீண்டுள்ளது. தற்போது சித்ரகூட் மாவட்டத்தின் நான்கு தாலுகாக்கள் - கர்வி, ராஜாபூர், மாவ் மற்றும் மனக்பூர் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன. இந்த 4 தாலுகாக்கள் உபி கீழ் வரும். ஆனால், அந்த மாவட்டத்தின் பிரதான பகுதியான சித்ரகூட் நகர் மட்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிறது. இது மத்தியப் பிரதேச ஆட்சியின் கீழ் வரும். இதன் மூலம் இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் என்ற சாதனையை சித்ரகூட் படைத்துள்ளது.
முக்கியத்துவம்:
சித்ரகூட் என்பது வரலாற்று ரீதியாகவும் முக்கியமான ஒரு மாவட்டமாக இருக்கிறது. இந்து மதம் மற்றும் புராணங்களில் சித்ரகூட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ராமர், தன் மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் வனவாசம் சென்ற போது, குறிப்பிட்ட காலத்தை இந்த சித்ரகூட் பகுதியில் தான் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்துக்கள் மத்தியில் இது மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த சித்ரகூட் பகுதிக்கு வருவார்கள். இங்குள்ள முக்கிய ஆன்மீக தலங்கள் குறித்து நாம் பார்க்கலாம். முதலில் காமத்கிரி மலை.. இதுதான் ராமர் தங்கிய இடமாகக் கருதப்படுகிறது.. எனவே, இந்த மலையைச் சுற்றி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது இங்கு வரும் இந்துக்களின் நம்பிக்கை.
ஆன்மீக இடங்கள்:
குப்ட் கோதாவரி குகை: ராமரும் லட்சுமணனும் வனவாசத்தின் போது இந்த குகையில் தான் தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. இது தவிர அனுமன் தாரா சதி அனுசுயா மற்றும் பர்தகூபா ஆகியவையும் ஆன்மீக ரீதியாக முக்கிய இடங்களாகக் கருதப்படுகிறது. இங்கு ஓடும் மந்தாகினி ஆறு, இப்பகுதியில் ஓடும் ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications