இன்டிகோ விமானிக்கு பளார் விட்ட பயணி.. அதிர்ந்த பணிப்பெண்.. எச்சரிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா
டெல்லி: விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து இன்டிகோ விமானத்தின் விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாகியுள்ளது. 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை பயணி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

விமானியை பயணி தாக்கும் வீடியோவை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடும் பனிமூட்டத்தால் விமானம் பல மணி நேரம் தாமதமானதை தொடர்ந்து, பணியில் இருந்த விமானக் குழுவினருக்கு பதிலாக ஷிப்ட்க்கு புதிய விமானக் குழுவினர் வந்துள்ளனர். அப்போது மஞ்சள் நிற ஹூடி அணிந்த நபர் திடீரென கடைசி வரிசையில் இருந்து ஓடி வருவதும் விமானத்தின் இணை விமானி அனுப் குமாரை அவர் தாக்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எத்தனை மணி நேரமாக நாங்கள் காத்திருப்பது என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே மீண்டும் சண்டையிடுகிறார் அந்த பயணி. விமானம் தாமதமானதற்காக பயணி ஒருவர் விமானியை தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே, விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் சாஹில் கட்டாரியா என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, விமானி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. விமானத்தில் பயணிகள் அத்து மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
-
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக்












Click it and Unblock the Notifications