தவியாய் தவித்த விமான பயணிகள்! ஆக்ஷனில் மத்திய அரசு! DGCA அலுவலகத்தில் ஆஜரான இண்டிகோ சிஇஓ!
டெல்லி: இண்டிகோ விமானங்கள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதால், ஏராளமான விமான பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தொடங்கியுள்ளது. தற்போது இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ ஆஜராகியுள்ளார்.
உள்நாட்டில் இயக்கப்பட்ட ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமானங்களின் கட்டணமும் அதிகரித்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு புதிய விதிமுறைகள் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த விதிகளை அமல்படுத்த மத்திய அரசு ஏறத்தாழ 2 ஆண்டுகள் வரை, விமான நிறுவனங்களுக்கு டைம் கொடுத்திருந்தன. ஆனால் இண்டிகோ இந்த விதிமுறையை அமல்படுத்தவில்லை. மாறாக, விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று அடம் பிடித்தது. மத்திய அரசு விட்டுக்கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். பயணிகளின் உடமைகள் நாள் கணக்கில் விமான நிலையத்திலேயே தேங்கி கிடக்கின்றன.
விமானங்கள் எவ்வளவு நேரம் விமானத்தை இயக்க வேண்டும்? குறிப்பாக இரவு நேரங்களில் எவ்வளவு முறை விமானங்களை தரையிறக்கலாம்? விமான பணியாளர்களின் பணி நேரம் என்ன? என்பதை புதிய விதிமுறை வரையறுத்திருந்தது. இந்த விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனில், கூடுதலான பணியாட்கள் அவசியம். இருக்கிற ஆட்களை கொண்டே காலத்தை ஓட்டிவிடலாம் என்று இண்டிகோ நினைத்திருந்தது. இதனால் போதுமான விமானிகள் இல்லாமல் விமானங்கள் ரத்தாகின.
விமான பயணிகள் கொந்தளிப்படைந்த நிலையில், தற்போதைக்கு விதிகளை அமல்படுத்துவதிலிருந்து தற்காலிகமாக விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பிப்ரவரி மாதம் வரை விதிகளை அமல்படுத்த வேண்டியதில்லை. இருப்பினும் இண்டிகோ விமான போக்குவரத்து இன்னம் சீரடையவில்லை. எனவே இது தொடர்பாக தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் ஆஜராகியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications