5 லட்சம் ஏக்கரில் தொழில் பூங்காக்கள்.. நாடு முழுக்க தரவரிசைப்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன்!
டெல்லி: நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இன்றைய அறிவிப்புகளின் முக்கிய நோக்கம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் தனது பேட்டியில், ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பலன் அடைந்து உள்ளனர் . ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. நமது தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.
உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவதே நோக்கம்.கொரோனா காரணமாக பட்ஜெட் தாக்கலாகி நீண்ட காலம் ஆனது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் பட்ஜெட் தாக்கல் ஆகி உள்ளது. பட்ஜெட்டின் பயன்கள் இனி தெரிய வரும்.
வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான 8 துறைகள் மீது இன்று கவனம் செலுத்துகிறோம். விமானம், கனிமங்கள், விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகள் மீது இன்று கவனம் செலுத்துவோம். நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
இதற்காக நிலங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மேக் இன் இந்தியா திட்டம் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும்.மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர இந்த திட்டம் வெளியானது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications