5 லட்சம் ஏக்கரில் தொழில் பூங்காக்கள்.. நாடு முழுக்க தரவரிசைப்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன்!
டெல்லி: நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இன்றைய அறிவிப்புகளின் முக்கிய நோக்கம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் தனது பேட்டியில், ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பலன் அடைந்து உள்ளனர் . ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. நமது தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.
உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவதே நோக்கம்.கொரோனா காரணமாக பட்ஜெட் தாக்கலாகி நீண்ட காலம் ஆனது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் பட்ஜெட் தாக்கல் ஆகி உள்ளது. பட்ஜெட்டின் பயன்கள் இனி தெரிய வரும்.
வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான 8 துறைகள் மீது இன்று கவனம் செலுத்துகிறோம். விமானம், கனிமங்கள், விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகள் மீது இன்று கவனம் செலுத்துவோம். நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
இதற்காக நிலங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மேக் இன் இந்தியா திட்டம் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும்.மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர இந்த திட்டம் வெளியானது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications