மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் திடீர் சஸ்பெண்ட்.. சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர்
டெல்லி: சொராபுதீன் ஷேக் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளை முதலில் விசாரணை நடத்திய மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய், உள்துறை அமைச்சகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு குஜராத் ஐபிஎஸ் பேட்ஜ்சை சேர்ந்தவர் ரஜ்னீஷ் ராய். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் மத்திய டெபுடேஷன் மூலமாக பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் ரஜ்னீஷ் ராய், கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் இந்த விண்ணப்பம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை. இதையடுத்து அலுவலகம் செல்வதை திடீரென நிறுத்திவிட்டார் ரஜ்னீஷ் ராய்.
தொடர்ந்து அலுவலகம் வராததால் அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐஜி மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமில்லாமல் விலகி கொண்டு இருப்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதை ரஜ்னீஷ் கண்டித்துள்ளார். இந்த பணி இடைநீக்கம் என்பது சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு குஜராத் சிஐடி கிரைம் பிரிவில் டிஐஜியாக பணியாற்றியவர் ரஜ்னிஷ் ராய். சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் போலி என்கவுண்டர் வழக்குகளை விசாரணை நடத்தியவர் இவர். அப்போது, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்தார். இதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications