பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Recommended Video

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் எனக்கு கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கான அறிகுறிகள் லேசாக இருந்தன. இதையடுத்து சளி மாதிரியை பரிசோதனை செய்தேன்.

அதில் எனக்கு கொரோனா உறுதியானது. நான் நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். அவர்களது வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறேன்.

கடந்த சில தினங்களாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள் என ட்விட்டரில் நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவரான ஜே பி நட்டா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டயமன்ட் ஹார்பருக்கு ஒரு பேரணிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அப்போது அவர் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications