நீட் பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து குதிக்க முயன்ற மாணவி! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நீட் பயிற்சி மைய கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து, 19 வயது மாணவி ஒருவர் கீழே குதிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெய்ப்பூரில் மகேஷ் நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாடியிலிருந்து குதிக்க முயன்ற மாணவி பயிற்சி மையத்தில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். நேற்று திடீரென அவர் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதிக்க முயன்றுள்ளார்.

பால்கனி சுவரின் மீது ஏறி அமர்ந்த அந்த மாணவி கீழே குதிக்க முயன்றிருக்கிறார். மாணவியை பின்தொடர்ந்து சென்ற ஆசிரியர் சரியான நேரத்தில் மாணவியை பிடித்து இழுத்து காப்பாற்றியிருக்கிறார். பின்னர் மாணவி பத்திரமாக கீழே கொண்டுவரப்பட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் சுருவைச் சேர்ந்த இந்த மாணவி, சமீபத்தில் பயிற்சி மையத்தில் சில தேர்வுகளில் தோல்வியடைந்ததாகவும், இதுதொடர்பாக விசாரிக்க பயிற்சி மையத்திற்கு அவரது பெற்றோர்கள் வந்ததாகவும், எனவே பயந்துபோய் மாடியிலிருந்து கீழே குதிக்க முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
நீட் தொடர்பான மரணங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜெய்பூரில் நடத்த சம்பவம் ராஜஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications