பாக் தாக்குதல் பற்றி எச்சரித்த அமெரிக்கா! இந்தியா சொன்னது என்ன தெரியுமா? ஜெய்சங்கர் பகிர்ந்த ரகசியம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.
இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கை மற்றும் இராணுவ நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது, ஜெய்சங்கர் கூறியதாவது:- இந்த மாத துவக்கத்தில், சர்வதேச நாடுகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியது.
மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க போவதாக
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ருபியோ, இந்தியா மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறுவதாக தகவல் கொடுத்தார். இதற்கு இந்தியா தீர்க்கமாக பதிலளித்தது. அதாவது, பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க முயன்றால் அதற்கு நிகரான எதிர்தாக்குதலை எதிர்கொள்ள அந்த நாடு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது" என்று பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க மூன்றாம் தரப்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்ததாக வெளியான தகவலை நிராகரித்து இருக்கிறார் ஜெய்சங்கர். 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்க இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் பேசியதாக வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் குற்றசாட்டு நேர்மையற்றது
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் முன்வைத்த குற்றசாட்டு நேர்மையற்றது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகே பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தோம். எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. எனது கருத்தை தவறாக மேற்கோள் காட்டி சில தலைவர்கள் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர். பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் படைகளின் மன உறுதியையும் பாதித்தது. உலகில் உள்ள 200 நாடுகளில், துருக்கி, அஜர்பைஜான் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன.
பேச்சுக்கே இடம் இல்லை
பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வரும் சீனா கூட , பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவை வழங்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் பாராட்டின. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும். சண்டை நிறுத்தம் வெறும் தற்காலிக நடவடிக்கைதான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்க போவது இல்லை. ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திய விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications