போராட்டத்தின் போது ஹாங்காங் மாணவர்கள் செய்தார்களே!.. நினைவிருக்கா?.. அதையே செய்த ஜாமியா மாணவர்கள்!
Recommended Video
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் போராட்டத்தின் போது காவல் துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

அமைப்புகள்
இதையடுத்து ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் போலீஸ் தடியடிக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டன. தமிழகம், புதுவை, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் செல்வதற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து வழிவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறும் இல்லாமல் சென்றது.

ஆம்புலன்ஸ்
இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு போராட்டக்காரர்கள் வழி விட்டனர்.
|
ட்வீட்
ஞாபகம் இருக்கிறதா. அது போன்ற ஒரு நிகழ்வுதான் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்தது. இவர்களெல்லாம் இடையூறு செய்பவர்கள் அல்ல. இந்த மாணவர்கள் நாம் அனைவருக்காகவும் போராடுகிறார்கள் என ஒரு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications