காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று லோக்சபாவில் தாக்கலாகும் முக்கியமான மசோதா
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்கிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதற்கிடையே காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குத் தீவிரவாதிகளை ஒழிக்கவும், எல்லை தாண்டி நடக்கும் பயங்கரவாதத்தை நிறுத்தவும் மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தப் பிரிவுகள் தான் ஜம்மு-காஷ்மீருக்கு 1949 முதல் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்ததோடு, தனி அரசியலமைப்பின் மூலம் அதன் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்களை வழங்கியிருந்தன. இந்தச் சட்டத்தை மத்திய அரசு நீக்கியது.
மாநிலத்தின் தனி அரசியலமைப்பை நீக்கும் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அமித் ஷா அறிவித்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீர் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக அங்கு இதே நிலை நீடித்து வருகிறது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை அங்குள்ள தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக காஷ்மீரின் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லாவும் தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தார்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி கல்வியாளர் ஜாகூர் அகமது பட் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்குக் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக எட்டு வாரக் கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
இந்தச் சூழலில் தான் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே இன்று அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications