சரிகிறது ரெட்டி சகோதரர்கள் சாம்ராஜ்யம்.. கைது பயத்தில் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு
Recommended Video

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கொன்றில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவர் ஜனார்த்தன ரெட்டி. சட்ட விரோத சுரங்க தொழில் மூலமாக, இரும்பு தாது ஏற்றுமதியால் பல லட்சம் கோடி சம்பாதித்த பெரும் பணக்காரர் இவர்.

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், சட்ட விரோத குவாரித் தொழிலுக்கு எதிராக எடியூரப்பா எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து எம்எல்ஏக்களை பிரித்து ரிசார்ட் அரசியலை துவக்கி வைத்தவரும் இவரே.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி. கடந்த சட்டசபை தேர்தலில், ரெட்டி சகோதரர்கள், தீவிர அரசியலில் களமிறக்கப்பட்டனர். ஆனால், பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நேரத்தில், சட்ட விரோதமாக கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி மீது பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவரை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜனார்த்தன ரெட்டியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. பெல்லாரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அங்கு, பாஜக வேட்பாளர் தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், ரெட்டிகளின் சாம்ராஜ்யம் சரிந்துவிட்டதாகவே கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
-
பெரம்பூர் தொகுதி.. விஜய்யை எதிர்க்க தயாராகும் ஆளூர் ஷா நவாஸ்? சென்னையில் களமிறங்கும் விசிக! -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்.. முதல்வர் யோகம் யாருக்கு -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
ஸ்ரீகாந்தி, ஜிகே மணி, அருள்.. பாஜகவிடம் 5 சீட் கேட்கும் ராமதாஸ்.. மாம்பழம் சின்னத்திற்கும் செக்! -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்! -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர்












Click it and Unblock the Notifications