Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் பலியான 10 பிஞ்சுகள்.. நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 10.35 மணியளவில் மருத்துவமனையின் இரு அறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

uttar pradesh narendra modi children

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆக்சிஜன் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த உயர் சிறப்பு சிகிச்சை மையத்தில் தீ உடனடியாக பரவி இருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச அரசு இந்தக் கோரச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜான்சியில் நடந்த கோர தீ விபத்து சம்பவத்தில் 10 பிஞ்சுகள் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கியுள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம்.

உ.பி மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+