உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் பலியான 10 பிஞ்சுகள்.. நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 10.35 மணியளவில் மருத்துவமனையின் இரு அறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆக்சிஜன் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த உயர் சிறப்பு சிகிச்சை மையத்தில் தீ உடனடியாக பரவி இருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச அரசு இந்தக் கோரச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜான்சியில் நடந்த கோர தீ விபத்து சம்பவத்தில் 10 பிஞ்சுகள் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கியுள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
உ.பி மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications