ஜார்கண்ட்டில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு.. இனி நாடு முழுக்க இப்படித்தான்
டெல்லி: நாட்டிலேயே முதன்முறையாக சூப்பர் சீனியர் முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்குகள் செலுத்தக் கூடிய வசதியை ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா இன்று டெல்லியில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், தெரிவித்தார்.

அப்போது அவர் கூடுதலாக ஒரு முக்கியமான தகவலையும் தெரிவித்தார்.
அதாவது, ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் மூலமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார் அவர்.
அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றி வருவோருக்கும், இதுபோன்ற வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அந்த கோரிக்கையை ஜார்கண்ட் மாநில தேர்தலின்போது அமல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. என்றாலும் கூட, அடுத்ததாக நடைபெற உள்ள டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலின்போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறையில் உள்ளவர்களும் தபால் மூலமாக வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டு வருவோம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை விடவும் இந்த தேர்தலின் போது ஜார்கண்டில் 20 சதவீதம் கூடுதல் வாய்ப்பு பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வாக்கு சதவீதத்தை உயர்த்துவதற்கு தேவைப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல தரப்பின் உதவியையும் கோரி இதுபோன்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டாலும் கூட, தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறைவாகவே இருக்கிறது.
அதிலும் சமீபத்தில் நிறைவடைந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலின்போது மும்பை போன்ற பெருநகரங்களில் மிகக்குறைந்த வாக்கு சதவீதம்தான் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில்தான் அடுத்தகட்ட முயற்சியாக தபால் வாக்குகளை அறிமுகம் செய்து அதன் மூலமாக வாக்குப்பதிவு சதவீதத்தையும் உயர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜார்கண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறை, இனிவரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுக்க அமல்படுத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications