இரவு முழுக்க போராட்டம்.. களத்தில் விடாமல் நிற்கும் மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த ஜேஎன்யூ தாக்குதல்
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க நேற்று போராட்டம் நடந்தது.
Recommended Video
டெல்லி: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க நேற்று போராட்டம் நடந்தது. இரவு முழுக்க மாணவர்கள் பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நேற்று முதல் நாள் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
முகமூடி அணிந்த கும்பல் நேற்று முதல்நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
நாளை பாரத் பந்த்.. பல்வேறு தொழிற்சங்கங்களின் 25 கோடி பேர் பங்கேற்பு.. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்
நேற்று எப்படி
நேற்று முதல்நாள் நடந்த இந்த தாக்குதலில் 35 பேர் காயம் அடைந்தனர். இப்படி காயம் அடைந்தவர்கள் எல்லோரும் இப்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு தலையில் மோசமாக காயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முதல் நாள்
இதற்கு எதிராக நேற்று முதல் நாள் இரவில் இருந்து கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்றும் இரவு முழுக்க நாடு முழுக்க போராட்டம் நடந்தது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சண்டிகரில் இருக்கும் கல்லூரிகள், உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள், கொல்கத்தாவில் உள்ள கல்லூரிகள் எல்லாம் போராட்டத்தில் ஈடுபட்டது.
போராடட்ம என்ன
இந்த போராட்டம் மும்பையில்தான் தீவிரமாக நடந்தது. மும்பையில் நேற்று இரவு முழுக்க கேட்வே ஆப் இந்தியா எனப்படும், இந்தியாவின் நுழைவாயில் அருகே போராட்டம் நடந்தது. மாணவர்கள் பலர் இரவு முழுக்க அங்கு அமர்ந்து போராட்டம் செய்தனர். இது இல்லாமல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் செய்தனர்.
மும்பை நிலை
அதேபோல் நேபால், கர்நாடகா ஆகிய இடங்களிலும் போராட்டம் தீவிரமாக நடந்தது. அமெரிக்காவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போராட்டம் மிக தீவிரமாக நடந்தது. கொலம்பியா பல்கலையிலும் மாணவர்கள் அடையாள போராட்டம் நடத்தினார்கள். இன்றும் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.