தகவல் பாதுகாப்பு சட்டம்.. பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்.. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
டெல்லி: மத்திய அரசின் தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நேற்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
2019ல் இந்த சட்டம் இரண்டு அவைகளிலும் கொண்டு வரப்பட்ட நிலையில், அது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற குழுவின் ஆய்விற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். பாஜக எம்பி பிபி சவுத்திரி இதை லோக்சபாவில் தாக்கல் செய்தார். 250 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஆகும் இது.

பரிந்துரை
மொத்தம் 6 முறை இந்த கமிட்டியின் ஆய்வு காலம் நீட்டிக்கப்பட்டது. பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தற்போது இந்த கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரளுமன்ற கூட்டுக்குழு இது தொடர்பாக அளித்துள்ள அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

பர்சனல் தகவல்
கூட்டுக்குழு பரிந்துரையின்படி தகவல் பாதுகாப்பு சட்டத்தில் தனிப்பட்ட தகவல்கள், பொது தகவல்களுக்கு இடையிலான வேறுபாடு சரியாக அளிக்கப்படவில்லை. தனிப்பட்ட பர்சனல் தகவல்களை இனம் காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தனிப்பட்ட தகவல், பொதுத்தகவல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை இந்த சட்டத்தில் காட்ட வேண்டும்.

24 மாதம்
இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர கால அவகாசம் எடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்பதால் அதற்கு என்று தனி டைம் லைன் உருவாக்க வேண்டும். 24 மாதங்களில் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரலாம் என்று இந்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா
அதேபோல் இந்த சட்டத்தின்படி இந்தியாவில் பயனாளர்களை கொண்டு இருக்கும் சமுக வலைதள பக்கங்கள் அனைத்தும் இந்தியாவில் அலுவலகத்தை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ஒரு ஆபிஸ் அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்பது தகவல் பாதுகாப்பிற்கு என்று கவுன்சில் அமைக்க வேண்டும். அது எந்த தகவலாக இருந்தாலும் இந்த கவுன்சிலுக்கு கீழ் வரும்.

பைனான்ஸ்
அதேபோல் சர்வதேச பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் SWIFT போன்ற பரிவர்த்தனை அமைப்புகளுக்கு பதிலாக புதிய பரிவர்த்தனை அமைப்புகளை கொண்டு வர வேண்டும். சர்வதேச பண பரிவர்த்தனையின் போது டேட்டா திருடப்படாமல் இருக்கும் வகையில் புதிய பரிவர்த்தனை அமைப்புகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசு
அதேபோல் அரசு இந்த டேட்டாக்களை கண்காணிக்கிறது என்றால் சட்டப்படி மட்டுமே கண்காணிக்க வேண்டும். அதை மீறி கண்காணிக்க கூடாது. எந்த ஒரு டேட்டா இழப்பு அல்லது ஹேக்கிங் நடைபெற்றாலும் அதை அரசோ, தனியார் நிறுவனமோ யாராக இருந்தாலும் 72 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்த குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அபராதம்
அதேபோல் டேட்டா இழப்பு அல்லது கசிவு குறித்து தகவல் கொடுக்காத நிறுவனங்களுக்கு 5 கோடி அபராதம் அல்லது அந்த நிறுவனத்தின் மொத்த சர்வதேச வருவாயில் ஒரு ஆண்டின் 2 சதவிகித வருவாய் அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் டேட்டா பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத, டேட்டாவை முறையாக பராமரிக்காத, இதற்கு என்று தனி அதிகாரியை நியமிக்காத நிறுவனங்களுக்கும் இதே அளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications