Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தகவல் பாதுகாப்பு சட்டம்.. பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல்.. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நேற்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

2019ல் இந்த சட்டம் இரண்டு அவைகளிலும் கொண்டு வரப்பட்ட நிலையில், அது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற குழுவின் ஆய்விற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். பாஜக எம்பி பிபி சவுத்திரி இதை லோக்சபாவில் தாக்கல் செய்தார். 250 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஆகும் இது.

பரிந்துரை

பரிந்துரை

மொத்தம் 6 முறை இந்த கமிட்டியின் ஆய்வு காலம் நீட்டிக்கப்பட்டது. பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தற்போது இந்த கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரளுமன்ற கூட்டுக்குழு இது தொடர்பாக அளித்துள்ள அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

பர்சனல் தகவல்

பர்சனல் தகவல்

கூட்டுக்குழு பரிந்துரையின்படி தகவல் பாதுகாப்பு சட்டத்தில் தனிப்பட்ட தகவல்கள், பொது தகவல்களுக்கு இடையிலான வேறுபாடு சரியாக அளிக்கப்படவில்லை. தனிப்பட்ட பர்சனல் தகவல்களை இனம் காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தனிப்பட்ட தகவல், பொதுத்தகவல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை இந்த சட்டத்தில் காட்ட வேண்டும்.

24 மாதம்

24 மாதம்

இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர கால அவகாசம் எடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சட்டத்தை அமலாக்க வேண்டும் என்பதால் அதற்கு என்று தனி டைம் லைன் உருவாக்க வேண்டும். 24 மாதங்களில் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரலாம் என்று இந்த பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

அதேபோல் இந்த சட்டத்தின்படி இந்தியாவில் பயனாளர்களை கொண்டு இருக்கும் சமுக வலைதள பக்கங்கள் அனைத்தும் இந்தியாவில் அலுவலகத்தை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ஒரு ஆபிஸ் அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்பது தகவல் பாதுகாப்பிற்கு என்று கவுன்சில் அமைக்க வேண்டும். அது எந்த தகவலாக இருந்தாலும் இந்த கவுன்சிலுக்கு கீழ் வரும்.

பைனான்ஸ்

பைனான்ஸ்

அதேபோல் சர்வதேச பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் SWIFT போன்ற பரிவர்த்தனை அமைப்புகளுக்கு பதிலாக புதிய பரிவர்த்தனை அமைப்புகளை கொண்டு வர வேண்டும். சர்வதேச பண பரிவர்த்தனையின் போது டேட்டா திருடப்படாமல் இருக்கும் வகையில் புதிய பரிவர்த்தனை அமைப்புகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசு

அரசு

அதேபோல் அரசு இந்த டேட்டாக்களை கண்காணிக்கிறது என்றால் சட்டப்படி மட்டுமே கண்காணிக்க வேண்டும். அதை மீறி கண்காணிக்க கூடாது. எந்த ஒரு டேட்டா இழப்பு அல்லது ஹேக்கிங் நடைபெற்றாலும் அதை அரசோ, தனியார் நிறுவனமோ யாராக இருந்தாலும் 72 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்த குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அபராதம்

அபராதம்

அதேபோல் டேட்டா இழப்பு அல்லது கசிவு குறித்து தகவல் கொடுக்காத நிறுவனங்களுக்கு 5 கோடி அபராதம் அல்லது அந்த நிறுவனத்தின் மொத்த சர்வதேச வருவாயில் ஒரு ஆண்டின் 2 சதவிகித வருவாய் அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் டேட்டா பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றாத, டேட்டாவை முறையாக பராமரிக்காத, இதற்கு என்று தனி அதிகாரியை நியமிக்காத நிறுவனங்களுக்கும் இதே அளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+