கூகுளில் பார்த்துவிட்டேன், இதெல்லாம் காரணம்னு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர முடியாது: நீதிபதி அதிரடி
டெல்லி: செந்தில் பாலாஜியின் மூளையில் கட்டியுள்ள ரத்தக் கட்டுக்கு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என கூகுளில் பார்த்துவிட்டேன். அதில் எந்த அச்சமும் படத்தேவையில்லை என அமைச்சரின் ஜாமீன் மனு மீதான வாதத்தின் போது உச்சநீதிமன்ற நீதிபதி திரிவேதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அவரது தம்பி தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சி, ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்பதால் நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமைச்சர் தரப்பு கூறியிருப்பதாவது" உடல்நல பாதிப்பை காரணம் காட்டியதை உயர்நீதிமன்றம் சரியாக ஆராயவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாக கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதை ஏற்க முடியாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
அவர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அது போல் அவருடைய மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம். அதை நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் ஆய்வு செய்யலாம். செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை சுட்டிக் காட்டி முகுல் ரோத்தகி வாதம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கானது டிசம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை பாதிப்பால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவருக்கு கடந்த 18ஆம் தேதிதான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்குதான் சிகிச்சை பெற வேண்டும். அங்குதான் சிகிச்சை பெற வேண்டும் என எந்த சட்டப்பிரிவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரது மூளையில் ரத்தக் கட்டி உள்ளது என்றார்.
அப்போது நீதிபதி திரிவேதி குறுக்கிட்டு, நான் கூகுளில் chronic lacunar infraction (மூளையில் ரத்தக் கட்டி) என்றால் என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன். அப்போது அது மருந்துகளால் குணப்படுத்தக் கூடியது என்றும் அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த மருத்துவ காரணங்களை வைத்துக் கொண்டு ஜாமீன் கொடுக்க முடியாது என்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications