நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: போலீசாரின் செல்போன்கள் ஒப்படைப்பு.. பரபர தகவல்
டெல்லி: ஹோலி பண்டிகை நாளில் டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்விடத்திற்கு முதலில் சென்ற போலீசாரின் செல்போன்கள் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் வைக்கும் ஒரு அறையில் தீயை அணைத்தபோது, அங்கு 4 அல்லது 5 சாக்கு மூட்டைகளில் எரிந்த நிலையில் கத்தை, கத்தையாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்
நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டு இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கொலீஜியம் கூட்டம் நேற்று நடந்தது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனால், நீதிபதி இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், இடமாற்றம் அமலுக்கு வரும். இதற்கிடையே, நீதிபதி வீட்டில் கத்தை கத்தையாக பணம் எரிந்த நிலையில், கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
5 போலீஸ்காரர்களின் போன்கள் ஒப்படைப்பு
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்துள்ளார். வர்மாவுக்கு எந்த நீதிமன்ற அலுவலும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் ஸ்பாட்டுக்கு முதலில் சென்ற 5 போலீஸ்காரர்களின் போன்கள் டெல்லி காவல்துறையில் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்தில் இந்த போன்கள் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு விசாரணையின் போது செல்போன்களில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
திங்கள் கிழமை காலை 5 போலீசாரையும் அழைத்த டெல்லி காவல் ஆணையர் சஞ்செய் ஆரோரா, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் எந்த தகவல்களையும் அழிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இரண்டு எஸ்.ஹெச்.ஓ, ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள் என ஐந்து பேரின் செல்போன்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications