நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு.. பாஜக அரசியல்வாதிகளுக்கு "கைலாசாவிலிருந்து கண்டனம்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை குரிய வகையில் பேசிய இந்திய அரசியல்வாதிகளுக்கு கைலாசா நாட்டிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைகாட்சி விவாத மேடையில் பேசிய போது முஸ்லீம்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறியிருந்தார்.

மேலும் இவரது கருத்தை டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நவீன் ஜிந்தால் ஆதரித்து பேசியிருந்தார். இந்தியாவில் உள்ள முஸ்லீம் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த நிலையில் நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நவீன் ஜிந்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய அரசுக்கு எதிராக அரபு நாடுகள் கொந்தளித்துள்ளன. இந்திய தூதருக்கு துபாய், சவுதி, பஹ்ரைன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகள் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளன.

இந்திய பொருட்களை புறக்கணிப்போம்

இந்திய பொருட்களை புறக்கணிப்போம்

மேலும் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளன. இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளும் பறிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கைலாசா நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் என சொல்லப்பட்டு ஒரு ட்விட்டர் கணக்கு உள்ளது.

இது உண்மையிலேயே கைலாசா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம்தானா என தெரியவில்லை. ஆயினும் அந்த ட்விட்டரில் போட்ட கருத்துகள் வைரலாகி வருகின்றன. அந்த ட்வீட்டில், நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகளால் மோசமான கருத்துகளை வெளியிட்டமைக்கு கைலாசா சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கைலாசாவுக்கான இந்திய தூதர்

கைலாசாவுக்கான இந்திய தூதர்

கைலாசாவுக்கான இந்திய தூதருக்கு வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தோம். அவரிடம் நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பேசியதற்கு கடும் கண்டனங்களை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தோம். அதே போல் சர்ச்சையாக பேசிய ஆளும் கட்சியை சேர்ந்த இருவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்ததை கைலாசா வரவேற்கிறது.

Recommended Video

    India வர திட்டம் போடும் Nithyananda.. மோசமாகும் உடல்நிலை? #Tamilnadu | Oneindia Tamil
    அமைதி

    அமைதி

    இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கைவிட்டுவிட்டு இந்தியா ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அது போல் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிராக தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது கைலாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கா என தெரியவில்லை. எனினும் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+