இந்தியில் மட்டுமே மத்திய அரசின் திட்டங்களின் பெயர்- லோக்சபாவில் கனிமொழி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Kanimozhi Lok Sabha speech | புல்லட் ரயில் முக்கியமில்லை: லோக்சபாவில் கொதித்த கனிமொழி- வீடியோ
டெல்லி: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கனிமொழி பேசியதாவது:

மத்திய அரசு ஒவ்வொரு திட்டத்துக்கும் இந்தி மொழியில்தான் பெயர் வைக்கிறது. என்னுடைய தொகுதியில் இருக்கும் கிராம மக்களால் இதை எப்படி புரிந்து கொள்ள முடியும்?
என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் பிரதமர் மோடி சதக் யோஜனா என போர்டு வைத்துள்ளனர். இதில் மொழி பெயர்ப்பு எதுவுமே இல்லை.
இது என்ன திட்டம் என்பது எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.












Click it and Unblock the Notifications