இந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி
டெல்லி: கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி தினமான இன்றைய நாளை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.
நமது தேசத்துக்காக, நமக்காக இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்த ராணுவ வீரர்களை போர்முனைக்கு அனுப்பி வைத்த தாய்மார்களுக்கு தலைவணங்குகிறேன்.
கார்கில் போர் நடந்த விதத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்திய நிலத்தைக் கைப்பற்றிவிடலாம் என தவறாக நினைத்து முதுகில் குத்தியது பாகிஸ்தான். பாகிஸ்தான் வீணான சாகசகத்தில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் துரோகத்தை மீறி இந்தியா வெற்றி பெற்றது. கொரோனா எதிர்ப்பு போரை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது. கொரோனா இன்னமும் குணமடையவில்லை. நாம் கொரோனா தொடர்பாக மேலும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications