Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைநழுவும் முதல்வர் பதவி? கோபத்தில் மைக்கை தட்டிவிட்ட சித்தராமையா! விரட்டும் சிவக்குமாரால் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி உள்ளது. நேற்று இருவரும் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய நிலையில் சித்தராமையா கோபத்தில் மைக்கை தட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முதல்வர் பதவி அவரது கைநழுவி செல்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Karnataka CM Race: Siddaramaiah knocked the mick to avoid question with anger in delhi

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா முதல்வர் பதவிக்கான போட்டி தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வரான சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பெற காய்நகர்த்தி வருகின்றனர்.

மேலும் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை, டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது டிகே சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதாக தெரிவிக்கவில்லை. இருவரும் முதல்வர் பதவி கட்டாயம் வேண்டும் என கூறி அடம்பிடிக்கின்றனர்.

குறிப்பாக டிகே சிவக்குமார்,‛‛எனக்கு கொடுத்தால் முதல்வர் பதவியை தாங்க. இல்லாவிட்டால் நான் அமைச்சரவையில் பங்கெடுத்து கொள்ள மாட்டேன். துணை முதல்வர், அமைச்சர் என எந்த பதவியும் எனக்கு வேண்டாம்'' என கறாராக கார்கேவிடம் கூறியுள்ளார். அதேபோல் சித்தராமையாவும் தனக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்து. இதனால் எந்த காரணத்தை கொண்டும் முதல்வர் பதவியை விட்டு தர முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்று டெல்லியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை டிகே சிவக்குமார், சித்தராமையாவிடம் மேலிட தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் சித்தராமையா பற்றிய ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்துவிட்டு சித்தராமையா வெளியே வந்தார்.

அப்போது அவரிடம் பத்திரிகையாளரிடம் ஒருவர், ‛‛மல்லிகார்ஜூன கார்கே உடனான சந்திப்பில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?'' என கேள்வி கேட்டார். அதற்கு சட்டென கோபமடைந்த சித்தராமையா அவர் வைத்திருந்த ஆக்ரோஷமாக 2 முறை தட்டிவிட்டார். மேலும் ‛இதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது'' என கறாராக கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+