காஷ்மீரில் சீனாவின் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்.. பகீர் தகவல்கள்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சீனாவின் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்கள் நடத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வரும் ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்தனர். நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் ஆஸ்திரியா தயாரிப்பு ஆயுதங்களையே தீவிரவாதிகள் பயன்படுத்தினர்.

1993 மும்பை தாக்குதல்கள், 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல்களில் இத்தகைய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன. இவற்றை பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாதிகளுக்கு விநியோகித்து வந்தது.
தற்போது குறிப்பாக காஷ்மீரில் 370-வது சரத்து நீக்கப்பட்ட பின்னர் நடத்தப்படுகிற தாக்குதல்களில் சீனா தயாரிப்பு கையெறி குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சீனா தயாரிப்பு சீரியல் எண்களைக் கொண்ட கையெறிகுண்டுகள் அடுத்தடுத்து பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் சீனா தயாரிப்பு 23 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சீனா தயாரிப்பு ஆளில்லா விமானங்களை பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பறக்க விட்டு வேவு பார்த்ததும் ஆயுதங்களை விநியோகித்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications