Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்களுக்கு முக்கியத்துவம்! பாஜகவின் அடுத்த 25 ஆண்டு ‛மெகா பிளான்’.. பிரதமர் மோடி உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛வரும் பாராளுமன்ற தேர்தல், அடுத்த 25 ஆண்டுகாலத்தை மனதில் வைத்து 4 மாநிலங்களில் புதிய அரசு அமைக்க வேண்டும். மேலும் பாஜக மற்றும் நாட்டுக்கான எதிர்கால தலைமையை உருவாக்க இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ல் வெளியாகின. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.

மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்வதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிக கவனம்

அதிக கவனம்

இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை நியமிப்பதில் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்துக்கு மட்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பிற 3 மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் இறுதியில் தான் தெரியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த 4 மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்ய அங்கு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல், அவர்களின் முழு விபரங்களையும் பாஜக மேலிடம் கேட்டுள்ளது.

மோடியின் ஆர்வம்

மோடியின் ஆர்வம்

இந்த 4 மாநில அமைச்சரவையில் இளம்வயதினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். பாஜகவின் அடுத்த 25 ஆண்டுகால தலைவர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். மேலும் இந்த விருப்பத்தை அவர் தனது கட்சியினரிடம் கூறியுள்ளார். அதாவது, "அடுத்த 25 ஆண்டுகளில் பாஜக மற்றும் நாட்டிற்கு தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கு இளைஞர்கள் அவசியம். இதனால் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன கணக்கீடு

என்ன கணக்கீடு

மேலும் இளைஞர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாஜகவுக்கான சிறந்த தலைவர்களை கண்டறிய முடியும் என கட்சி மேலிடம் நம்புகிறது. இதனால் 4 மாநில அமைச்சர்கள் நியமனத்தில் ஜாதி, பிராந்தியம் கவனத்தில் கொண்டாலும் கூட இளம் வயதினருக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

கல்வி தகுதி

கல்வி தகுதி

புதிய அமைச்சர்களாக தேர்வாகும் நபர்களின் கல்வி தகுதி, செல்வாக்கு, அரசியல் செயல்பாடு, ஜாதி கட்டமைப்பு உள்பட பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவை உள்பட அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள். இது பாஜகவின் எதிர்கால ஆட்சியை உறுதி செய்ய வசதியாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது. மேலும் ஒவ்வொரு எம்பிக்களும் தங்களது தொகுதியில் பாஜகவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்காத 100 வாக்குச்சாவடிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் குறைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+