இளைஞர்களுக்கு முக்கியத்துவம்! பாஜகவின் அடுத்த 25 ஆண்டு ‛மெகா பிளான்’.. பிரதமர் மோடி உரை
டெல்லி: ‛‛வரும் பாராளுமன்ற தேர்தல், அடுத்த 25 ஆண்டுகாலத்தை மனதில் வைத்து 4 மாநிலங்களில் புதிய அரசு அமைக்க வேண்டும். மேலும் பாஜக மற்றும் நாட்டுக்கான எதிர்கால தலைமையை உருவாக்க இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ல் வெளியாகின. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.
மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை தேர்வு செய்வதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிக கவனம்
இந்த 4 மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்களை நியமிப்பதில் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்துக்கு மட்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பிற 3 மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் இறுதியில் தான் தெரியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த 4 மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்ய அங்கு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியல், அவர்களின் முழு விபரங்களையும் பாஜக மேலிடம் கேட்டுள்ளது.

மோடியின் ஆர்வம்
இந்த 4 மாநில அமைச்சரவையில் இளம்வயதினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். பாஜகவின் அடுத்த 25 ஆண்டுகால தலைவர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். மேலும் இந்த விருப்பத்தை அவர் தனது கட்சியினரிடம் கூறியுள்ளார். அதாவது, "அடுத்த 25 ஆண்டுகளில் பாஜக மற்றும் நாட்டிற்கு தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கு இளைஞர்கள் அவசியம். இதனால் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன கணக்கீடு
மேலும் இளைஞர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாஜகவுக்கான சிறந்த தலைவர்களை கண்டறிய முடியும் என கட்சி மேலிடம் நம்புகிறது. இதனால் 4 மாநில அமைச்சர்கள் நியமனத்தில் ஜாதி, பிராந்தியம் கவனத்தில் கொண்டாலும் கூட இளம் வயதினருக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

கல்வி தகுதி
புதிய அமைச்சர்களாக தேர்வாகும் நபர்களின் கல்வி தகுதி, செல்வாக்கு, அரசியல் செயல்பாடு, ஜாதி கட்டமைப்பு உள்பட பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவை உள்பட அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள். இது பாஜகவின் எதிர்கால ஆட்சியை உறுதி செய்ய வசதியாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது. மேலும் ஒவ்வொரு எம்பிக்களும் தங்களது தொகுதியில் பாஜகவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்காத 100 வாக்குச்சாவடிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் குறைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications