ஏப்ரல் 9ல் கேரளா சட்டசபை தேர்தல். மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.. அறிவித்த தேர்தல் ஆணையம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அரசியல் நிலவரம் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி எல்டிஎப் என்று அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பாஜக தனது செல்வாக்கை உயர்த்த போராடி வருகிறது.

கேரளாவை எடுத்து கொண்டால் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கேரளாவுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அவர் அறிவித்தார்.
அதன்படி கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய மார்ச் 23ம் தேதி கசைடி நாளாகும். அதன்பிறகு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாளாகும். பிறகு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.
கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2வது முறையா வென்று ஆட்சியை தக்க வைத்தது. மீண்டும் பினராயி விஜயன் முதல்வரானார்.
அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 61 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகள், கேரள காங்கிரஸ் (எம்) 5 தொகுதிகள், இந்திய சோசலிஸ்ட் ஜனதா தளம் தலா 2 தொகுதிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) கட்சி 2 தொகுதிகள், மற்றவர்கள் என்று மொத்தம் 95 இடங்களில் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் யுடிஎப் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன்படி காங்கிரஸ் 21, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 15, கேரள காங்கிரஸ் 2, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி 1, பிற கட்சிகள் 2 என்று மொத்தம் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications