இது புதுவகை மிரட்டல்.. ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்.. காலிஸ்தான் தீவிரவாதி பன்னூன் பகீர்
டெல்லி: காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். வரும் நவ. 1 முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்த அவர், இதனால் அந்தக் காலகட்டத்தில் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கனடாவிலும் அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இந்த குர்பத்வந்த் சிங் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். காலிஸ்தான் பிரிவினைவாத கருத்துகளைப் பரப்பும் இவர், பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மிரட்டல்: காலிஸ்தானி பயங்கரவாதியான இவர் இப்போது புதிய மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது வரும் நவம்பர் 1 முதல் 19ம் தேதி வரை யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். சீக்கியர்கள் மீதான தாக்குதல் நடந்து 40 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த குறிப்பிட்ட தேதிகளில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா உட்பட பல்வேறு விமானங்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல் வரும் நிலையில், இந்த மிரட்டல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா உட்பட பல விமானங்களுக்குக் கடந்த சில நாட்களாக வரிசையாக மிரட்டல் வருகிறது. இதனால் அவசர அவசரமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், அனைத்து மிரட்டல்களுமே போலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் தொடர்பாக உடனடியாக மத்திய அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல ஏர் இந்தியா தரப்பிலும் இதுவரை எந்தவொரு கருத்தும் கூறப்படவில்லை.
முதல்முறை இல்லை: மேலும், அவர் இதுபோல மிரட்டல் விடுப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இதுபோல மிரட்டல் விடுத்தார்.
மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுவோம் என்றும் நவம்பர் 19ம் தேதி ஏர்போர்ட் மூடப்படும் என்றும் கூறினார். அது மட்டுமின்றி ஏர் இந்தியாவில் மக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதனால் அவர் மீது கிரிமினல் சதி, மதத்தின் அடிப்படையில் பகையை ஏற்படுத்துவது, உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றம்: அதேபோல கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தைத் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். 2001 டிச. 13ம் தேதி நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்தார். மேலும், கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் போலீஸ் இயக்குனர் கவுரவ் யாதவ் ஆகியோரை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுபோல அவர் ஏகப்பட்ட மிரட்டல்களை விடுத்து இருந்தாலும், அவை வெற்று மிரட்டல்களாகவே இருந்துள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங்கை கடந்த 2020 ஜூலை மாதம் மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது. அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும், அவர் நடத்தி வரும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கடந்த 2019இல் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications