வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் வலுவடைகிறோம்.. விவசாய சங்கங்கள்!
டெல்லி: எங்கள் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரின் இருந்து ஆதரவு கிடைத்திருப்பதால் நாங்கள் நாளுக்கு நாள் வலுவடைகிறோம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை. விவசாயிகளுக்கு பாதகமான 3 சட்டங்களையும் திரும்ப பெறும் வரை டெல்லியை விட்டு செல்ல மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்களான பாப் பாடகி ரிஹான்னா, பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்கங்கள் கூறுகையில், விவசாயிகளின் இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வெளிநாட்டு பிரபலங்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மகா பஞ்சாயத்துகளுக்கு கிடைத்த பேராதரவை அடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவில் மகா பஞ்சாயத்துகளை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
வரும் காலத்தில் பெரிய அளவிலான விவசாயிகள் டெல்லிக்கு வருகை தருவர். அரசின் செயல்பாடுகளால் பால்வால் எல்லையில் விவசாயிகள் தர்னா போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே இணையதள சேவைகளை முடக்கிய அரசு, போராட்டக் களங்களில் ஊடகங்களின் வரவையும் தடுத்து கொண்டிருக்கிறது என விவசாய அமைப்புகள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications