150 மி.கி விந்தணு, 4 திருமணம், ரெட் லைட் ஏரியா.. கொல்கத்தா மருத்துவர் கொலை! பரவும் தகவலும் உண்மையும்
டெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் சஞ்சய் ராய் என்ற நபர் கைதாகியுள்ள நிலையில், அவரை பற்றி இணையத்தில் பல வித தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவுக்குச் செய்திகள் உலா வருகின்றன. இதற்கிடையே சஞ்சயின் குடும்பத்தினர் இது குறித்துப் பேசியுள்ளனர். அதை நாம் விரிவாக பார்க்கலாம்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சாய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவல்கள்: பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பு கூறுகிறது. அதேநேரம் சமூக வலைத்தளங்களில் அதற்கு நேர்மாறாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. பெண் மருத்துவர் உடலில் 150மிமீ விந்தணு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக ஒரு தகவல் பரவியது. அதேபோல கைதாகியுள்ள சஞ்சய் ராய் நான்கு முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இன்னும் சிலர் அவர் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருந்ததாகவும் அடிக்கடி ரெட் லைட் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் கூட தகவல் பரவியது.
மேலும், அவர் காவல் துறையில் தன்னார்வலராக மட்டுமே பணியாற்றினாலும் கூட, தன்னை போலீஸ் போல கட்டிக் கொண்டதாகவும் குற்றம் நடந்த ஆர் கார் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றதாகவும் எல்லாம் தகவல் பரவின. இதில் எது உண்மை.. எது பொய் என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதான சஞ்சய் குடும்பத்தினரே இதை கூறியுள்ளனர்.
எது உண்மை: முதலில் சஞ்சய் ஒரு தன்னார்வலராக இருந்த போதும் அவர் காவலரை போலவே சுற்றி வந்து இருக்கிறார். தனது பைக்கில் கொல்கத்தா போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட அவர், கொல்கத்தா போலீஸ் என்ற டீ சர்ட்டை போட்டுக் கொண்டு தான் எப்போதும் இருப்பாராம். மேலும், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு நோயாளிகளிடம் படுக்கைகளை ஏற்பாடு செய்வதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும் லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கைதான சஞ்சயின் தாயார் இது தொடர்பாகக் கூறுகையில், "அவன் என்னுடன் தான் தங்கி இருந்தான். ஆனால், கடைசி சில மாதங்கள் போலீசாருடன் இருக்கத் தொடங்கிவிட்டான். இந்தக் குற்றத்தை அவன் தனியாகச் செய்திருக்க வாய்ப்பு இல்லை. பலருக்கு இதில் தொடர்பு இருக்கும். எனது மகனைச் சிக்க வைத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவன் அப்பா இறந்ததும் அவன் தான் குடும்பத்தைக் கவனித்து வந்தான்" என்றார்.
மேலும், சஞ்சய் ராயின் 2வது மனைவி கருவுற்று இருந்த போது உயிரிழந்தது உண்மை தான் என்ற போதிலும் அவர் கேன்சர் காரணமாகவே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம் சஞ்சய் ராயின் மூத்த சகோதரி வேறு விதமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
எத்தனை திருமணம்: அவர் கூறுகையில், "எனக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் ஆனது. என் திருமணத்தைத் தந்தை எதிர்த்ததால் நான் இங்கு வரவே இல்லை" என்றார். தொடர்ந்து இணையத்தில் பரவும் தகவல்கள் குறித்துப் பேசுகையில், "அவனுக்கு 2 திருமணங்கள் நடந்தது உண்மை. இரண்டு மனைவிகளையும் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், 4 பேரை கல்யாணம் செய்ததாகச் சொல்வதில் எனக்குத் தெரிந்து உண்மை இல்லை.
மேலும், சஞ்சய் இந்த குற்றத்தைச் செய்திருப்பான் என நம்ப முடியவில்லை. இதன் பின்னணியில் வேறு சிலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அவன் இந்தக் குற்றத்தைச் செய்திருந்தால் நிச்சயம் அவனைத் தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை" என்றார்.
கொல்கத்தா போலீஸ்: பயிற்சி மருத்துவரின் உடலில் 150 மிமீ அளவுக்கு விந்தணு இருந்ததாகத் தகவல் பரவிய நிலையில், அதற்குக் கொல்கத்தா போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சுப்ரீம் கோர்டில் இந்த வாதம் முன்வைக்கப்பட்ட போதும் கூட, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை வைத்து எல்லாம் நீதிமன்றத்தில் வாதமாக வைக்கக் கூடாது என்று நீதிபதிகளும் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் குற்றம் நடந்த நாளில் ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றது உண்மை தான் என கொல்கத்தா போலீசார் கூறியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications