புல்வாமா டென்ஷனுக்கு இடையில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு… சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்
டெல்லி:புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான், இந்தியா இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து, இந்தியா தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது.
முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றார் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. பின்னர்... பாகிஸ்தான் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீவிரவாதத்தை தூண்டியதாகக் கூறி, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

அதனை எதிர்த்து, இந்தியா சார்பில், சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குல்பூஷனின் மரண தண்டனையை நிறைவேற்ற தற்காலிகத் தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்பூஷனின் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடவுள்ளார்.
இறுதி விசாரணைக்கு பிறகு.... சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா?











Click it and Unblock the Notifications