புல்வாமா டென்ஷனுக்கு இடையில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு… சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்
டெல்லி:புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான், இந்தியா இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து, இந்தியா தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது.
முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றார் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. பின்னர்... பாகிஸ்தான் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீவிரவாதத்தை தூண்டியதாகக் கூறி, பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

அதனை எதிர்த்து, இந்தியா சார்பில், சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குல்பூஷனின் மரண தண்டனையை நிறைவேற்ற தற்காலிகத் தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்பூஷனின் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடவுள்ளார்.
இறுதி விசாரணைக்கு பிறகு.... சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications