Ladakh Moon research: நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு போக.. லடாக்கில் பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்! அசத்தும் இந்தியா
டெல்லி: எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் செல்ல இருக்கிறார்கள். இதற்காக பயிற்சி எடுக்க லடாக்கில் சிறப்பு ஆய்வு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. உலகின் வேறு எந்த இடத்தை காட்டிலும் லடாக்கில் பயிற்சி மையம் அமைக்கப்படுவது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளது.
மனிதர்கள் நிலவு மற்றும் செவ்வாய்க்குச் செல்லும் சாத்தியமான விண்வெளிப் பயணங்களுக்காக, பெங்களூருவைச் சேர்ந்த ப்ரோட்டோபிளானட் எனும நிறுவனம் "மனித வெளிக்கோள் ஆய்வு" திட்டத்தை லடாக்கின் ட்சோ கார் பகுதியில் தொடங்கியுள்ளது.

இது ஒரு சிறப்பு ஆய்வு நிலையமாகும். இங்கு ஆகஸ்ட் 1 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபடுவார்கள். ஆழமான விண்வெளிச் சூழலை உருவகப்படுத்தி, மனிதர்களின் உடல் மற்றும் மனநல தகவமைப்புத் திறன், நெகிழ்வுத்தன்மையை மதிப்பிடும் விரிவான ஆய்வுகள் இங்கு நடைபெறும்.
இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, பூமியை விட்டு தொலை தூரத்திற்கு சென்று நீண்ட காலம் மனிதர்கள் தங்கி இருப்பதற்கு ஏற்ப நீடித்த இருப்புக்கான உறுதியான விதிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க உதவும் என ப்ரோட்டோபிளானட் தெரிவித்துள்ளது.
உயரமான மற்றும் குளிர்ந்த பாலைவனமான ட்சோ கார், நிலவு மற்றும் செவ்வாயின் புவியியல், சுற்றுச்சூழல் நிலைமைகளை ஒத்துள்ள ஒரு சிறந்த ஒப்புமைத் தளமாக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இத்திட்டத்தில் ப்ரோட்டோபிளானட் உடன் இணைந்துள்ளது. "நிலைய கட்டுமானத்திற்கு இஸ்ரோ ஒரு பகுதி நிதி அளித்ததுடன், விண்ணப்பதாரர் தேர்வு அளவுகோல்களையும் பரிந்துரைத்தது," என்று ப்ரோட்டோபிளானட் இயக்குநர் சித்தார்த் பாண்டே தெரிவித்தார்.
முதல் கட்ட பரிசோதனைக்காக, விண்வெளிப் பொறியியல் மற்றும் கோள் அறிவியலில் பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகளான ராகுல் மோகலபள்ளி மற்றும் யமன் அகோட் இங்கு உளவியல், உடலியல், மரபணுவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
லடாக்கில் அமைந்திருப்பதை போலவே, அமெரிக்காவில் செவ்வாய் பாலைவன ஆய்வு நிலையம், கனடாவில் ஃப்ளாஷ்லைன் செவ்வாய் ஆர்க்டிக் ஆய்வு நிலையம், ரஷ்யாவில் பயோஸ்-3 என பல சர்வதேச ஆய்வு மையங்கள் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உருவகப்படுத்துகின்றன. சர்வதேச தரத்திற்கு நிகராக லடாக்கில் ஆய்வு நிலையைம் அமைக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications