உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு
டெல்லி: உடல்நலம் பாதிக்கப்பட்ட நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு பிரசாத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு பிரசாத் யாதவின் ஆலோசனைபடி அவரது அலுவலகத்தினர் உருது மொழியில் ட்வீட் போட்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில் எனது கண்களிலிருந்து தீப்பிழம்புகள் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
சிறுபான்மையினருக்கு எதிரானதை அனுமதிக்கக் கூடாது என்ற எனது கொள்கைகள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நோய்வாய்பட்டவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரே என நீங்கள் மனசோர்வடைய கூடாது.
|
கடவுளுக்கு நன்றி
சிறை தண்டனை உள்ளிட்ட ஆயிரம் காயங்கள் ஏற்பட்டாலும் இன்னும் எதிரிகளை எதிர்த்து நிற்கும் திறமை அப்படியே உள்ளது. எனது சுயமரியாதை அப்படியே உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று லாலு தெரிவித்துள்ளார்.

உருது மொழியில் ட்வீட்
இந்த ட்விட்டரில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தனது கட்சியினரிடம் பொதுக் கூட்டத்தில் லாலு பேசிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு ஆதரவாக உருது மொழியில் ட்வீட் போட்டதால் இது வைரலாகி வருகிறது.

இரு அவைகளில்
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்ஸி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜோரோஸ்டியர்கள் ஆகிய 6 பிரிவினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம்
இதில் முஸ்லீம்களின் பெயர் இடம்பெறாததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவும் சிறையில் இருந்தபடியே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications