2022-ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
டெல்லி: நடப்பு ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

ஹஜ்-2022 யாத்திரைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களில் மிக முக்கியமானது பாஸ்போர்ட். இந்திய-சர்வதேச பாஸ்போர்ட்டை யாத்ரீகர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் யாத்திரை குழுவின் தலைவரது வங்கி கணக்கும் அவசியமானது.
மேலும் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிட வேண்டும். அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் செல்போன் எண்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட விவரங்களையும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும்.
ஆன்லைனில் அப்லோடு செய்யும் பாஸ்போர்ட் புகைப்படம் 10kb முதல் 100kb வரை அளவிலும், 100பிக்சல் முதல் 148பிக்சல் வரையும் இருக்க வேண்டும். பதிவேற்றும் டாக்குமெண்டுகளின் அளவு 100kb முதல் 500kb வரை, 570 பிக்சல் முதல் 795 பிக்சல் வரை இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications