"பொது சிவில் சட்டம்!" ஜூலை 28 வரை கருத்துகளை கூறலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே மீண்டும் பொது சிவில் சட்டம் தான் இங்கே பேச்சாக இருக்கிறது. அதாவது நாட்டில் இப்போது அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கிறது.

இருப்பினும், ஒரே சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இதை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,
பாஜக இதைத் தேர்தலிலேயே வாக்குறுதியாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் இது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி,"இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் தான். ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இது குறித்து கருத்துக் கேட்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று வரை பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும், பல்வேறு தரப்பினரும் இதன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஜூலை 28ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications