"பொது சிவில் சட்டம்!" ஜூலை 28 வரை கருத்துகளை கூறலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே மீண்டும் பொது சிவில் சட்டம் தான் இங்கே பேச்சாக இருக்கிறது. அதாவது நாட்டில் இப்போது அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கிறது.

இருப்பினும், ஒரே சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இதை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,
பாஜக இதைத் தேர்தலிலேயே வாக்குறுதியாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் இது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி,"இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் தான். ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இது குறித்து கருத்துக் கேட்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று வரை பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும், பல்வேறு தரப்பினரும் இதன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஜூலை 28ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications