Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்றது ஏன்? கைதான வழக்கறிஞர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் இன்று நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது. ராகேஷ் கிஷோர் யார்? எதற்காக இந்த செயலை செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதி பேசிக்கொண்டிருந்த போது அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென எழுந்து சென்று தான் காலில் அணிந்திருந்த ஷூவை எடுத்து நீதிபதி நோக்கி வீசினார்.

lawyer-throws-shoe-at-cji-br-gavai-over-vishnu-idol-comment-who-is-rakesh-kishore

ஷூவை வீசிய வழக்கறிஞர்

ஆனால் ஷூ நல்வாய்ப்பாக நீதிபதி மீது படவில்லை. அதற்கு முன்பாகவே கீழே விழுந்தது. உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை வெளியே இழுத்து சென்றனர். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் எந்தவித பதற்றமும் அடையாத தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், 'நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். "இவை எல்லாம் என்னை பாதிக்காது. இது போன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது" என்று கூறினார்.

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கைது

இந்த நிலையில் நீதிபதி மீது காலணியை வீச முயன்றவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிபதி மீது காலணி வீச முயற்சித்ததாக டெல்லி போலீசாரால் ராகேஷ் கிஷோர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "சனாதனத்துக்கு எதிராக கருத்து கூறியதால் தான் தாக்கினேன்" என்று கூறியுள்ளார்.

முந்தைய வழக்கு ஒன்றில், கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பாக நீதிபதி பி.ஆர். கூறிய கருத்தினை கண்டித்து தான் இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக தொடர்ந்து ராகேஷ் கிஷோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யார் இந்த ராகேஷ் கிஷோர்?

ராகேஷ் கிஷோர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 71 வயது வழக்கறிஞர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும், கிளார்க்குகளுக்கும் வழங்கப்படும் பிராக்ஸிமிட்டி கார்டை (proximity card) வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், "இப்போது சென்று தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தான் இன்று வழக்கறிஞர் கிஷோர் காலணியை வீசி தாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+