லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுனை 4வது கட்டமாக எத்தனை நாட்கள் நீட்டிப்பது குறித்து என்பது குறித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. இந்த லான்டவுன் 4.0 வில் நிறைய தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேருக்கு பரவி உள்ளது. இதுவரை 2800 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைள் எடுத்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு லாக்டவுனை 3ம் முறை நீட்டித்தது. 3ம் கட்ட லாக்டவுன் இன்றுடன் முடிவுகிறது. மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிந்துரை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் சில மாநிலங்கள் மட்டுமே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தின.
பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் தற்போது மத்திய அரசு முடிவு செய்து வரும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை கொரோனா மண்டலங்களை மாநில அரசுகளே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக , குஜராத், தமிழகம், டெல்லி, ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களில் லாக்டவுன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் உள்ளன. எனினும் மத்திய அரசு 4வது கட்ட லாக்டவுன் இன்னும் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும், எவ்வளவு தளர்வுகள் வழங்கப்படும் என்பதை இன்று அறிவிக்க உள்ளது. அப்போது தெரிந்துவிடும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications