கொரோனா பாதிப்பால் லோக்பால் நீதிபதி ஏ.கே. திரிபாதி மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கி லோக்பால் உறுப்பினரான நீதிபதி ஏ.கே. திரிபாதி காலமானார்.
கொரோனா தாக்கி போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் மரணமடைந்துள்ளனர். ஏற்கனவே சத்தீஸ்கர் ஹைகோர்ட் தலைமை நீதிபதி அஜய்குமார் திரிபாதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதியும் லோக்பால் உறுப்பினருமான ஏ.கே. திரிபாதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்புதான் லோக்பால். இதன் உறுப்பினராக இருந்த ஏ.கே. திரிபாதி, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications