மஞ்சள் நிற புகையாக மாறிய லோக்சபா.. அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் போட்ட கலர் பாம்.. பின்னணி என்ன?
டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகை குண்டுகளை போட்டனர். இதனால் லோக்சபா மஞ்சள் நிற புகையால் சூழப்பட்டது. இந்நிலையில் தான் அந்த புகை குண்டுகள் குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது. தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.

அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின் சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள் வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும் பதறியடித்து ஓடினர். இருப்பினும் சில எம்பிக்கள் துணிச்சலாக அந்த நபர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? எதற்காக லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்தனர்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள் பார்வையாளர்களாக சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தான் அவர் போட்ட மஞ்சள் நிற புகையை வெளியேற்றிய மர்மபொருள் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேநாள்.. லோக்சபாவில் அத்துமீறி நுழைந்த 2 பேர்.. 22 ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
அதாவது லோக்சபாவுக்குள் நுழைந்த நபர்கள் புகையை உருவாக்கும் குண்டுகளை எடுத்து வந்து கைவரிசை கா்டடியுள்ளார். புகையை உருவாக்கும் குண்டுகளை அவர்கள் சபைக்குள் தூக்கி எரிந்து உள்ளனர். மேலும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இந்த நபர்களின் இத்தகைய செயலால் லோக்சபாவின் ஒருபகுதி முழுவதும் மஞ்சள் நிற புகையாக சூழ்ந்தது. இதனால் எம்பிக்கள் அலறியடித்து ஓடினர்.
கலர் பாம்ஸ் என அழைக்கப்படும் இது திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சாதாரணமாக பேன்ஸி கடைகள் மற்றும் ஆன்லைனில் குறைந்த விலைகளிலேயே கிடைக்கும். இந்த குண்டுகளில் இருந்து வெளியேறும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications