எதிரி நாட்டு எல்லையில் கூட இப்படி இல்லையே... தடைகளை உடனடியாக அகற்றுங்கள் - சு. வெங்கடேசன் எம்.பி
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக முள்வேலிகள் போட்டு 14 அடுக்கு அரண்களை அமைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்று மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
டெல்லி: இந்த இடம் ஏதோ இந்தியா சீனா எல்லையைப் போல இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் போல உள்ளது. சொந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிராக இத்தனை தடுப்புகளை ஏற்படுத்துவதா? என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை பார்ப்பதற்காக சென்ற அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் 70வது நாளை எட்டப்போகிறது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் குடிநீர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காசிப்பூர் பகுதியில் பல அடுக்கு அரண் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. முள்வேலிகளும் கான்கிரீட் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தடைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக எம்பிக்கள் இன்று காசிப்பூர் பகுதிக்கு பேருந்து மூலம் பயணம் செய்தனர். அதனை சு. வெங்கடேசன் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்திக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் காஸிபூர் நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். திமுக வின் சார்பில் கனிமொழி, திருச்சி சிவா, விசிக சார்பில் தொல் திருமாவளவன் மற்றும் இரவிக்குமார் சிபிஐ சார்பில் செல்வராஜ் சிபிஎம் சார்பில் ஆஃரீப்பும் நானும் இக்குழுவில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை பார்ப்பதற்காக காசிப்பூர் எல்லைக்கு வந்தோம். இந்த இடம் ஏதோ இந்தியா சீனா எல்லையைப் போல இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் போல உள்ளது. சொந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிராக இத்தனை தடுப்புகளை ஏற்படுத்துவதா? 14 அடுக்கு தடுப்புகளை உருவாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் சு. வெங்கடேசன்.
இது ஜனநாயக நாடுதானா? உச்சநீதிமன்றத்திற்கு மிக அருகில், நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இதுபோன்ற அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications